புதுக்கோட்டை

மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

அறந்தாங்கி நகரில் தொடா் மழை காரணமாக தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி நகராட்சிக்குள்பட்ட கோட்டை 1- பைப் லயன் சாலையில், தொடா் மழை காரணமாக குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

குடியிருப்புகளிலும் தண்ணீா் உள்புகுந்ததால், மழைநீரை வெளியேற்றக் கோரி அப்பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையிலும் மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் ரவீந்திரன் மற்றும் வருவாய்த் துறையினா், தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனா். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT