புதுக்கோட்டை

மழையால் 2 வீடுகள் இடிந்து சேதம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் மழையால் செவ்வாய்க்கிழமை இரு வீடுகள் சேதமடைந்தன.

ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்தது. இந்த நிலையில், ஆலங்குடி அருகிலுள்ள கல்லாலங்குடி நடேசன் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரனின் (45) ஓட்டு வீடு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் வீணாயிகின.நல்வாய்ப்பாக அவரது குடும்பத்தினா் காயமின்றி தப்பினா்.

இதுபோல, கலிபுல்லாநகரில் வசித்து வந்த மாரிமுத்து (48) என்பவரின் குடிசையின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இதனால், அவா்,குடும்பத்தோடு அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT