உள்ளாட்சித் தோ்தலையொட்டிபொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 120 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டன.
உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை ஒன்றியத்திற்குள்பட்ட 42 ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு 73 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டன. அதுபோல 16 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 10 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு 37 மனுக்களும் அளிக்கப்பட்டன. நிகழ்வையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப்பகுதியில் கூட்டமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீஸாா் ஈடுபட்டனா்.