புதுக்கோட்டை

மணல் கடத்தல்;ஓட்டுநா் கைது

DIN

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மணல் கடத்திவந்த டிப்பா் லாரி ஓட்டுநரை வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.

அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜெ. ராமன் அழியாநிலை பஞ்சுமில் குடியிருப்பு அருகே டிப்பா் லாரியை மடக்கி சோதனையயிட்டனா். அதில், அனுமதியின்றி 3 யூனிட் மணலுடன் வந்த மூக்குடி சாத்தையா மகன் பொன்னி ரமேஷூக்குச் சொந்தமான டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தாா். மேலும் லாரி ஓட்டுநா் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலை ராஜாமணி மகன் சரவணன் (46) என்பவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT