புதுக்கோட்டை

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

DIN


அறந்தாங்கியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் ஏ.அஜ்மீர் அலி, ஞாயிற்றுக்கிழமை மாலை  இறந்துவிட்டார். இறப்புக்கு முன்பு அவரது உடலை  அமைப்பின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவரது உறவினர்கள் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அறந்தாங்கி தலைவரை அணுகி, அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திங்கள்கிழமை அவர்களுக்கான மயானத்தில் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.  
தொடர்ந்து, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்படாததால், அந்த அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.  இதனால் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT