புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே ஊராட்சி பைக் கூட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பூவரசகுடியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி எம்எல்ஏ  சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பூவரசக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன், கல்விக்கடன், சுயஉதவிக் குழுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், புதுக்கோட்டை- அறந்தாங்கி இடையே இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் பூவரசகுடி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கட்சியின் ஒன்றியச்செயலர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT