புதுக்கோட்டை

பழனிக்கு பாதயாத்திரை பயணம்

DIN

பொன்னமராவதி, சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர். 
வரும் 21-ம் தேதி தைப்பூச விழாவையொட்டி வேந்தன்பட்டி வேல், பொன்னமராவதி பாலமுருகன் கோயில் பாதயாத்திரைக் குழுவினர், செவலூர், கோவனூர் பாதயாத்திரை குழுவினர், வலையபட்டி பச்சைக்காவடி பாதயாத்திரை குழுவினர், இந்திராநகர் வேல்முருகன் பாதயாத்திரை குழுவினர் புதன்கிழமை தங்களது பழனி யாத்திரையைத் தொடங்கினர். 
கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழியெங்கும் கொடையாளர்களால் அன்னதானம் வழங்கப்படுகிறது. காவடி பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையாகவே காவடி ஏந்தி திரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT