புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, பாப்பான்விடுதி, களபம், ஆலங்காடு, அரையப்பட்டி, கொத்தகோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூர், மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, கே.ராசியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.