மலேசியாவின் செம்பிலன், லிண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, தொழில்முறை மற்றும் சா்வதேசமயமாக்கல் ஆய்வு, வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி ஆசிரியா், மாணவா், ஆய்வாளா்கள் பரிமாற்றத்துக்காக இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
லிண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி துணைவேந்தா் காமிஸ் பின் அவாங், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் பி.பாலமுருகன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.