புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த இளைஞா் பலி

DIN

மாத்தூா் அருகே நாய் குறுக்கே வந்து மோதியதால், மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகிலுள்ள உலகத்தான்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் கௌமாறன் ( 25). செவ்வாய்கிழமை இரவு  வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் விசலிகோவில் பகுதிக்குச் சென்றாா்.

அப்போது சாலையில்  திடீரென  நாய் ஒன்று வேகமாக குறுக்கே வந்து கௌமாறன்  ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த கெளமாறன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT