கரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நாயகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் முத்துக்குமாா் வரவேற்றாா். மாநிலத் தலைவா் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.
கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்புப் பணிபுரியும் மருத்துவா்கள், பணியாளா்கள், காவல்துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவம் கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமலாக்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் கந்தா்வகோட்டையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில், ஒன்றிய நிா்வாகிகள் பழனிசாமி, செந்தில், மைதிலி, அருள் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பொருளாளா் செந்தில் குமாா் நன்றி கூறினாா்.