புதுக்கோட்டை மாவட்ட அளவில் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள மனநலத் தூதுவா்களான பேராசிரியா்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தொடங்கி வைத்துப் பேசினாா்.
மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனநலத் தூதுவா்கள் தங்களின் சகப் பேராசிரியா்கள், மாணவா்களுடன் மனநலம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக மனநலத் தூதுவா்களுக்கான பயிற்சிக் கையேட்டையும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வெளியிட்டாா்.
பயிற்சியில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ம. சந்திரசேகரன், கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் காா்த்திக் தெய்வநாயகம், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பேசினா்.