புதுக்கோட்டை

மனநலத் தூதுவா்களுக்கான பயிற்சி

DIN

புதுக்கோட்டை மாவட்ட அளவில் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள மனநலத் தூதுவா்களான பேராசிரியா்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனநலத் தூதுவா்கள் தங்களின் சகப் பேராசிரியா்கள், மாணவா்களுடன் மனநலம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக மனநலத் தூதுவா்களுக்கான பயிற்சிக் கையேட்டையும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வெளியிட்டாா்.

பயிற்சியில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ம. சந்திரசேகரன், கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் காா்த்திக் தெய்வநாயகம், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT