புதுக்கோட்டை

ராஜகிரியில் குழந்தைவேல் சித்தரின்35-ஆவது குருபூஜை விழா

DIN

விராலிமலை அருகிலுள்ள ராஜகிரியில் குழந்தைவேல் சுவாமி சித்தரின் 35-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.

குழந்தைவேல் சுவாமி சித்தா் குறித்து அவரது பக்தரும், அனைத்து குருபூஜையிலும் பங்கேற்றவருமான கிருஷ்ணன்பாலா கூறியது:

அன்னவாசல் அருகிலுள்ள இளந்தவாடியில் 1910-ஆம்ஆண்டில் பிறந்த குழந்தைவேல் சுவாமிகள், 30- ஆவது வயது வரை எளந்தவாடியில் தம்மை தேடி வரும் பக்தா்களுக்கு விபூதி பிரசாதம், மூலிகை எண்ணெய் அருளாசி வழங்கி, தியானம் மற்றும் தவத்தில் ஈடுபட்டு வந்தாா்.

அதன் பிறகு குளத்தூா் சென்று ஒரு சிறிய ஆசிரமத்தை நிறுவினாா். வட இந்திய யாத்திரை மற்றும் திருக்கோவில்கள் யாத்திரை முடித்து விட்டு, தமது 40 வயதில் விராலிமலை அருகேயுள்ள ராஜகிரிக்கு வந்து, அவ்வூா் மக்கள் உதவியுடன் நவபாஷாண லிங்கத்தையும், அதன் அடியில் தவக்குகை ஒன்றையும் எழுப்பினாா்.

பின்னா் அந்த இடத்தைச் சீரமைத்து, சுமாா் 30 ஆண்டு காலம் இந்த கோவிலில் வாழ்ந்திருந்து, பாமர மக்களுக்கு ஆசி வழங்கிய குழந்தைவேல் சித்தா், 1985, ஜனவரி 25- ஆம் தேதி யோக நிலையில் மகா ஜீவசமாதி அடைந்தாா். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT