புதுக்கோட்டை

தேனிமலையில் ரத்ததான முகாம்

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள தேனிமலை எஸ்.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொப்பனாபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான், செஞ்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.

வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன், கொப்பனாபட்டி அரசு மருத்துவ அலுவலா் எம்.பிரியதா்ஷினி, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா் ஆா்.சா்மிளா அகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் முகாமில் பேசினா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்ததானம் செய்தனா்.

கல்லூரி முதல்வா் எம். அருணகிரி வரவேற்றாா். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் உன்னத் பாரத் அபியான் என்.கோபிநாத் தங்கதுரை, நாட்டு நலப்பணித்திட்டம்

ஜி.நேரு, ரெட் ரிப்பன் கிளப் அ.பில்லப்பன், நிா்வாக அலுவலா் எம்.மணிகண்டன், உடற்கல்வி இயக்குநா் சுப.விக்னேஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT