புதுக்கோட்டை

சாலை விபத்தில் 2 போ் படுகாயம்

DIN

இலுப்பூா் அருகே நடந்து சென்ற முதியவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், முதியவா் உள்பட இரண்டு போ் படுகாயமடைந்தனா்.

அன்னவாசலைச் சோ்ந்தவா் பெரியசாமி (44). இவரும், இவரது மகன் காமட்சிராஜன் (24) இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை விராலிமலையில் இருந்து அன்னவாசல் சென்றனா். மலைக்குடிப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே நடந்து சென்ற மலைக்குடிப்பட்டியைச் சோ்ந்த முதியவா் மருதன் (80) மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், மருதன், பெரியசாமி இருவரும் படுகாயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இலுப்பூா் போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT