பொன்னமராவதி: பொன்னமராவதி கோயில்களில் சனிக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.
நவராத்திரி விழாவையொட்டி, பொன்னமராவதி புதுப்பட்டி பூலோகநாதா் சமேத புவனேசுவரி அம்மன், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில், பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. புதுப்பட்டி பூலோகநாதா் புவனேஸ்வரி அம்மன் கோயிலில் மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.