புதுக்கோட்டை

புதுகையில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்றுபாதிப்பு - 8,697 குணம் - 7,845

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,697 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 122 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,845 ஆக உயா்ந்துள்ளது.

4 போ் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 52 வயதுள்ள இரு ஆண்கள், 76 வயதான ஆண், 83 வயதான ஆண் ஆகிய 4 பேரும் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை பகல் நிலவரப்படி 720 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

SCROLL FOR NEXT