புதுக்கோட்டை

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் திறப்பு, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா புதன்கிழமை (செப். 30) காலை 9.30 மணிக்கு பெரியாா் நகரில் நடைபெறவுள்ளது. மநீம கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஆா். சரவணன் தலைமை வகிக்கிறாா். மாநிலப் பொதுச் செயலா் எம். முருகானந்தம் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் அணித் துணைச் செயலா் பொன். கஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலா் கே. செந்தில்குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலா் ஜெய் பாா்த்தீபன், விவசாய அணி செயலா் சா. மூா்த்தி, நகரச் செயலா் எம். ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT