புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் கைது

DIN

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய புகாரில் 3 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள கருக்காகுறிச்சி அக்னியாற்றுப் பகுதியில் அனுமதியின்றி சிலா் மணல் திருட்டில் ஈடுபடுவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில், வடகாடு காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை இரவுஅப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அக்னியாற்றுப்பகுதியில் மணல் அள்ளிய கருக்காகுறிச்சி நாகராஜன்(47), ரமேஷ்(36), தினேஷ்(34) ஆகியோரைக் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT