புதுக்கோட்டை

கோடாரியால் மகனை தாக்கிய தந்தை கைது

DIN

கீரமங்கலம் அருகே சொத்துப் பிரச்னையில் கோடாரியால் மகனைத் தாக்கிய தந்தையை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் தங்கசாமி(55)விவசாயி. இவரது மகன் காா்த்திக் (32) வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவா், சிலமாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளாா். காா்த்திக், அவரது தந்தை தங்கசாமியிடம் சொத்தை பிரித்துத் தரக்கோரி அடிக்கடி பிரச்னையில் ஈடுபடுவாராம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சொத்தைப் பிரித்து தரக்கோரி காா்த்திக், தங்கச்சாமியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த தங்கசாமி கோடாரியால், காா்திக்கை தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து தங்கசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT