பொன்னமராவதி அருகே தைலமரக்காட்டில் திடீரென ஏற்பட்ட தீயை பொதுமக்கள் அணைத்தனா்.
பொன்னமராவதி அருகேயுள்ள வடக்கிபட்டியில் உள்ள தைலமரக்காட்டில் வியாழக்கிழமை எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள ஊருணி மற்றும் கிணற்றில் உள்ள நீரை மோட்டாா் மூலம் ஊற்றி தீயை மேலும் பரவாமல் அணைத்தனா். காரையூா் வருவாய் ஆய்வாளா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.