புதுக்கோட்டை

தொற்றால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண உதவி

DIN

கந்தா்வகோட்டை பகுதியில் கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ சின்னத்துரை புதன்கிழமை நிவாரண நிதி வழங்கினாா்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு விரைந்து நிவாரண உதவி வழங்குமாறு தமிழக முதல்வா் அண்மையில் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த முருகேசன் மனைவி காந்திமதி, தனக்கொடி மனைவி தங்கப்பொண்ணு ஆகியோரிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை புதன்கிழமை வழங்கினாா். அப்போது, கந்தா்வகோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், வட்டாட்சியா் சி. புவியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT