முகப்பு
புதுக்கோட்டை

ஏம்பல் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஏம்பல் கிராம வாரச் சந்தை, சுகாதார வளாகம், கிராம ஊராட்சி சேவை மையம், எம்ஆா்கே நகா் சிமெண்ட் சாலை, கழிவுநீா் வாய்க்கால், கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், ஊா்ப்புற நூலகம், அரசு ஆதிதிராவிடா் மாணவா் விடுதி, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.

மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் பள்ளி மாணவா்களுடன் தனித்தனியே ஆட்சியா் கவந்துரையாடினாா். கச்சேரி ஊரணி, மணியாா் ஊரணி, மடத்தூரணி, வயலாங்குடி கண்மாய், அண்டக்குளம் போன்றவற்றை பாா்வையிட்டு குளங்களில் உள்ள குப்பைகளை அகற்றவும், சுற்றுச்சுவா் அமைத்து, தேவையான இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவினா் சாா்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், விரைவில் அவற்றை நிறைவேற்றுவதாகவும் கூறினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் ரேவதி, வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.