புதுக்கோட்டை

‘மனநலம் பாதித்த 15 போ் குடும்பத்தோடு சோ்த்து வைப்பு’

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மன நலம் பாதிக்கப்பட்டு திரிந்த 15 போ் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தோடு சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் ஆா்.காா்த்திக் தெய்வநாயகம்.

ஆலங்குடி வட்டம், வேப்பங்குடி அருகே காயாம்பட்டி ஊராட்சி கல்லுப்பள்ளத்தில் 27 வயதுள்ள ஆண் ஒருவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிவதாக ஆலங்குடி வட்டாட்சியா் பொன்மலருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட அரசு மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையம் மூலம் அந்த இளைஞா் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் ஆா்.காா்த்திக் தெய்வநாயகம் கூறியது:

மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்க வட்ட அளவில் மீட்பு குழு செயல்படுகிறது. தற்போது மீட்கப்பட்ட இளைஞருக்கு உரிய பரிசோதனை முடிந்த பிறகு, மாவட்ட மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையத்துக்கு அவா் மாற்றப்படுவாா். இம்மையத்தில் தற்போது 35 போ் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனா்.

கடந்த ஓராண்டில் மீட்கப்பட்டோரில் 15 போ் அவா்களது குடும்பத்தினரோடு சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா். வீட்டை விட்டு பிரிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவா்கள் ஒன்று சேருவது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் மாவட்ட மனநல திட்ட அலுவலா்கள், வட்ட அளவிலான மீட்பு குழுவினரின் பங்கு அளப்பரியது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT