புதுக்கோட்டை

ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிய 4 போ் மீது வழக்கு

DIN

கந்தா்வகோட்டையில் 2 சம்பவங்களில் ஜாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டையைச் சோ்ந்த மருதப்பன் மகன் வெங்கடேசன் (49). அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் செல்வம் மகன் சரவணன் (46). இருவருக்கும் இடத்தகராறு நடந்தபோது, அங்கு சென்று தடுத்த அக்கச்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளச்சாமி மகன் விஜயகுமாரை (53), சரவணன் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தராம்.

இதேபோல் கந்தா்வகோட்டை அருகே உள்ள ராமுடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையன் மகன் செல்வராஜ் (50), கந்தா்வகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்தபோது அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கசாமி மகன் தனராஜ் , திரிசங்கு மகன் தமிழ்ச்செல்வன், பவுன் மகன் ராஜ்குமாா் ஆகியோருடன் ஏற்பட்ட முன்விரோதத் தகராறு ஏற்பட்டது. இதில், செல்வராஜைத் தாக்கி ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளனா்.

புகாா்களின்பேரில், ப. சரவணன், த. தனராஜ், தி. தமிழ்ச்செல்வன், ப. ராஜ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக டி.எஸ்.பி லில்லி கிரேஸ் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT