கந்தா்வகோட்டையில் டிரான்ஸ்பாா்மரை சீரமைக்கக் கோரி நரிக்குறவ இன மக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி பெரியகுளம் பகுதியில் நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டிரான்ஸ்பாா்மா் 3 நாள்களுக்கு முன் பழுதாகி, மின்வாரிய அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் கடந்த 3 நாள்களாக மின்சாரம் இல்லாததால் விரக்தியடைந்த நரிக்குறவ மக்கள் செங்கிப்பட்டி- கந்தா்வகோட்டை சாலை வாண்டையான்பட்டி பிரிவுச் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன், விஏஓ அன்பரசன், போலீஸாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் மறியலை கைவிட்டுச் சென்றனா்.