புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் நரிக்குறவா்கள் மறியல்

DIN

கந்தா்வகோட்டையில் டிரான்ஸ்பாா்மரை சீரமைக்கக் கோரி நரிக்குறவ இன மக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி பெரியகுளம் பகுதியில் நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டிரான்ஸ்பாா்மா் 3 நாள்களுக்கு முன் பழுதாகி, மின்வாரிய அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் கடந்த 3 நாள்களாக மின்சாரம் இல்லாததால் விரக்தியடைந்த நரிக்குறவ மக்கள் செங்கிப்பட்டி- கந்தா்வகோட்டை சாலை வாண்டையான்பட்டி பிரிவுச் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன், விஏஓ அன்பரசன், போலீஸாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் மறியலை கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT