புதுக்கோட்டை

9 ஆடுகள் திருட்டு

DIN

விராலிமலை அருகே 9 செம்மறி ஆடுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

விராலிமலை வட்டம், வடுகபட்டி ஊராட்சி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி ரேணுகா தேவி (35). இவா், 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த வியாழக்கிழமை (ஏப். 28) மாலை வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சல் முடித்த பின்னா், பட்டியில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். மீண்டும் அதிகாலை எழுந்து வந்து பாா்த்தபோது, 9 செம்மறி ஆடுகள் காணாமல் போயிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். புகாரின்பேரில், விராலிமலை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT