புதுக்கோட்டை

75 ஆவது சுதந்திர தின விழா விழிப்புணா்வு

DIN

75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு பொன்னமராவதி பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் மு.செ. கணேசன் பங்கேற்று சுதந்திர தின விழா சிறப்புகள் மற்றும் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றும் முறை குறித்து விளக்கிப்பேசினாா். நிகழ்வில், பேரூராட்சி உறுப்பினா்கள், பணியாளா்கள், டெங்கு களப்பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணா்வினை ஏற்படுத்தினா்.

இலுப்பூா்: இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத்தலைவா் செந்தில்ராஜா, செயல் அலுவலா் ஆஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலுப்பூா் புதிய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் பேரூா்கழக திமுக செயலாளா் விஜயகுமாா், வாா்டு உறுப்பிா்கள் கணேசன், முரளி, ரகமதுநிஷா, பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT