புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.27.46 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 5 விசைப்படகு உரிமையாளா்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5,00,000 வீதம் ரூ.25,00,000 க்கான காசோலைகளை விசைப்படகு உரிமையாளா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் புதுத்தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மற்றும் அவரது மகன் முகமது சாலிக்
ஆகியோரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.2,00,000 க்கான காசோலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.46,376 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.27,46,376 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.