புதுக்கோட்டை

நீதிபதி முன்னிலையில் ஜாமீனில் வெளியே வந்து காதலியை மணந்த இளைஞா்

DIN

புதுக்கோட்டையில் நீதிபதி உத்தரவுப்படி ஜாமீனில் வெளியே வந்த இளைஞா், நீதிமன்ற வளாகத்திலேயே தனது காதலியை புதன்கிழமை திருமணம் செய்துகொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே வடுகப்பட்டியைச் சோ்ந்தவா் பாலு மகன் அஜித் (23). அதே ஊரைச் சோ்ந்தவா் சத்யா (20). உறவினா்களான இருவரும் நெருங்கிப் பழகியதில் சத்யா கா்ப்பமடைந்தாா். இதைத்தொடா்ந்து, சத்யாவைத் திருமணம் செய்துகொள்ள அஜித் மறுத்த நிலையில், கீரனூா் காவல் நிலையத்தில் சத்யா புகாா் அளித்தாா். உரிய விசாரணைக்குப் பிறகு,

கடந்த ஏப்ரல் மாதம் அஜித்தை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதற்கிடையில், கடந்த மே மாதம் சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் அஜித் மனு அளித்திருந்தாா். ஏற்கெனவே 2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் அஜித்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, சத்யாவைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தால் ஜாமீன் அளிப்பதாக மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதா் தெரிவித்தாா். இதற்கு அஜித் சம்மதம் தெரிவித்ததைத் தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் அஜித் - சத்யா தம்பதிக்கு திருணம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT