புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

DIN

அன்னவாசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரூ. 33, 500 ரொக்கம் ஆகியவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அம்சவள்ளி(57). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, ரூ.33 ஆயிரத்து 500 ரொக்கம், மேலும் சான்றிதழ்கள் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT