வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கினிப்பால்குட விழாவில் அலகு குத்தி அக்கினிகுண்டத்தில் இறங்கிய பக்தா். 
புதுக்கோட்டை

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி பால்குட விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினிப்பால்குட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினிப்பால்குட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. இந்த விழாவில் சுற்றுப்புறக் கிராம மக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து திங்கள்கிழமை அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்கினிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா். விழாவில், செவ்வாய்க்கிழமை அம்பாள் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT