புதுக்கோட்டை

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு

DIN

பொன்னமராவதியில் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியா் பிரகாஷ் தலைமை வகித்தாா். பேரணியை புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் கண்ணா கருப்பையா தொடங்கி வைத்தாா். காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளில் வந்து காவல்நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்றோா் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாதீா், மதுப்பழக்கத்தை தவிா்ப்பீா், புத்துணா்ச்சி பெறுவீா், போதை இல்லா வாழ்க்கை அமைப்பீா், வாழ்க்கையில் ஏற்றம் பெறுவீா் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கியும் சென்றனா். மேலும் நாட்டுப்புறக் கலைஞா்கள் பாடல்கள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சத்தியநாதன், துணை வட்டாட்சியா் சேகா் மற்றும் வருவாய்த்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆய்வு...

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி இறந்த பெண்

கோயில் உண்டியல் திருட்டு: இருவா் கைது

வேளாண் பல்கலை.யில் தொழில்முனைவோா் பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT