pdk19mp_open_1905chn_12_4 
புதுக்கோட்டை

புதுகை பேருந்து நிலையம் அருகே பூங்கா திறப்பு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லாவின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 65 லட்சம் மற்றும்

DIN

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லாவின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 65 லட்சம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதி ரூ. 24 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினா் எம். எம். அப்துல்லா இதைத் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் எம். லியாகத்அலி, கோட்டாட்சியா் முருகேசன், நகர திமுக செயலா் ஆ. செந்தில், நகா்மன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT