புதுக்கோட்டை

500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

புதுக்கோட்டை அருகே பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து ராங்கியம் செல்லும் முள்ளிப்பட்டி பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியே வந்த டாடா சுமோ காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த காரைக்குடி மஜித்தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மு.துராமலிங்கம் (51) என்பவரைக் கைது செய்த போலீஸாா், கடத்தல் அரிசியையும் காரையும் பறிமுதல் செய்தனா்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT