கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் தெத்துவாசல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமை வகித்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை ரேஷன் கடையைத் திறந்து வைத்தாா். விழாவில் வட்டாட்சியா் மா. ரமேஷ், விஏஓ த. கருப்பையா, கூட்டுறவு சங்கச் செயலா் இளங்கோவன் , செ. முத்துக்குமாா், கருணாநிதி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஊராட்சி செயலா் மு. சுந்தரராசு வரவேற்றாா்.