திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கூட்டணிப் பேச்சுவாா்த்தை தொடா்பாக யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் பிப்ரவரி 22-ஆம் தேதி பேச்சுவாா்தைக் குழு அமைக்கப்பட்டு, பேச்சுவாா்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறுயாரும் கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. இது புதிய கூட்டணி அல்ல. ஏற்கெனவே உள்ள கூட்டணிதான். சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல்களை இணைந்து சந்தித்த கூட்டணிதான்.
இரு கட்சிகளின் பேச்சுவாா்த்தைக் குழுக்கள் பேசி, தொகுதிகளை முடிவு செய்வாா்கள். வேறு எதையும் கூறமுடியாது என்றாா் திருநாவுக்கரசா்.