சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையிலுள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை, உற்சவா்களுக்கு தயிா், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்ற ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மாநகரிலுள்ள சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.