புதுகையில் 32ஆவது மாநில குழு சதுரங்கப் போட்டிகள் தொடக்கம்
புதுக்கோட்டையில் 32ஆவது தமிழ்நாடு மாநில குழு சதுரங்கப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. வரும் 5ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
புதுக்கோட்டையில் 32ஆவது தமிழ்நாடு மாநில குழு சதுரங்கப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. வரும் 5ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
வியாழக்கிழமை காலை இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜி. குணசேகரன் தொடங்கி வைத்தாா். சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்தும் மொத்தம் 95 அணிகள் பங்கேற்றுள்ளன.
நிகழ்வில் அகில இந்திய சதுரங்க கழகத்தின் முன்னாள் செயலா் வி. ஹரிஹரன், சா்வதேச நடுவா் ஆா். அனந்த ராமன், அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் சதுரங்க அமைப்பின் செயலா் வி.எல். ஆனந்தபாபு, தமிழ்நாடு சதுரங்க கழக துணை தலைவா் வி. விஜயராகவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலா் பேரா. எஸ். கணேசன் வரவேற்றாா். முடிவில், புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக் கழகத்தின் துணைத் தலைவா் அ. அடைக்கலவன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.