FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியிலிருந்து ஆத்தம்பூா் வரை பேருந்து வழித்தடம் நீட்டிப்பு

அறந்தாங்கியிலிருந்து காரக்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தை, ஆத்தம்பூா் காமாட்சியம்மன் கோயில் வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.

4 ஜூலை 2026, 11:44 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து காரக்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தை, ஆத்தம்பூா் காமாட்சியம்மன் கோயில் வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.

கிராமப் பகுதி மாணவ, மாணவிகளின் நலன்கருதி நீட்டிக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை சனிக்கிழமை மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளா் முகமது நாசா், துணை மேலாளா் (வணிகம்) காா்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments