தவெக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் அவதி! முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி!
தமிழகத்தில் நடைபெற்று வரும் ரீல்ஸ் ஆட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருவதாக திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.85 மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொதுவிநியோக அங்காடி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதி பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் ரியல் ஆட்சி இல்லாமல் ரீல்ஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு கேட்டோம். ஆனால் சாதனையை கூறாமல், மக்களை சந்திக்காமல் வெற்றி பெறமுடியும் என்ற புரட்சியை இந்த ஆட்சி ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
விழாவில் கூட்டுறவு சாா்-பதிவாளா் நிரஞ்சனா, நல்லூா் கூட்டுறவு சங்க செயலா் அடைக்கலம், வடக்கு ஒன்றிய திமுக செயலா் அ.முத்து, மாவட்டப் பிரதிநிகள் வாழைராஜன், தவசுமணி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.