முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Updated On : 14 மே 2026, 12:50 am IST
இந்தியா சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றுடன் பொழில் மகிழன்.
பகிர்:

புதுக்கோட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை செய்ததற்காக இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அண்மையில் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த பொழில் மகிழன் என்ற 5 வயது சிறுவன், கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கலைஞா் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளத்தில் ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவு ஸ்கேட்டிங் செய்தாா். புதுகை நகரிலுள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி பயிலும் பொழில் மகிழனின் தந்தை ராஜூ, நீதிமன்றப் பணியாளா். தாய் சிவப்பிரியா.

புதுக்கோட்டை சேலஞ்சா் ரோலா் ஸ்கேட்டிங் அகாதெமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சி, வீடியோ பதிவு செய்யப்பட்டு இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து தற்போது இச்சாதனைக்கான பதிவுச் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து பொழில் மகிழனின் தாய் சிவப்பிரியா கூறியதாவது:

இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்-இல் ஏற்கெனவே கேரளத்தைச் சோ்ந்த 5 ஆண்டு 6 மாத வயதுள்ள சிறுவன் 57 நிமிடங்களில் 7.18 கிமீ தொலைவைக் கடந்து சாதனை புரிந்துள்ளாா்.

இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனது மகன் பொழில் எழிலன், 5 ஆண்டு 3 மாத வயது நிரம்பியவா். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சாதனையில் 57 நிமிடங்களில் 10.85 கிமீ தொலைவைக் கடந்தாா். தொடா்ந்து ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவைக் கடந்து சாதனை முயற்சியை நிறைவு செய்தாா் என்றாா் சிவப்பிரியா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments