கிணறு தோண்டிய போதுவிழுந்த தொழிலாளி சாவு
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வல்லம் அருகே செல்லப்பன்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் போசங்கு (55). இவர் மற்ற தொழிலாளிகளுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் மே 9-ம் தேதி தூர் வாரிக் கொண்டிருந்தாராம். இவர் மேலே நின்று கொண்டு மண் கூடையை வாங்கும்போது தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்தக் காயமைடந்த போசங்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement