தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 20 வாகனங்களுக்கு அபராதம்

DIN

தஞ்சாவூரில் பதிவு எண் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக 20 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எண் பலகை இல்லாதது, பதிவு எண் இல்லாமல் ஓட்டியது, காப்பீடு செய்யாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது என பல்வேறு காரணங்களுக்காக 20 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ரூ. 200 முதல் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஓர் நான்கு சக்கர வாகனத்துக்கு மட்டும் ரூ. 7,000அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT