தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து சாலை ஆய்வாளர் சாவு

DIN

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த வீரையன் மகன் முருகேசன் (38). நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.  
ஞாயிற்றுக்கிழமை மாலை  தனது வீட்டிலுள்ள பல்பு எரியாததால் அதை முருகேசன் சரி செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராமல் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.  உடனடியாக  அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகேசனின் மனைவி தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT