தஞ்சாவூர்

ஆடுதுறையில் மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,   ஆடுதுறையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை தெற்கு சேனியத்தெருவை சேர்ந்தவர் ஹஜீதாபீவி (69). இவரது கணவர் முகமதுசாலிக் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவரது ஒரே மகன் சபீர்முகமது (40) துபையில் பணியாற்றி வருகிறார்.  ஹஜீதாபீவி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது தங்கை மகபுனிசா,  ஹஜீதாபீவியை போனில் தொடர்பு கொண்டபோது, ஆண் ஒருவர் பேசினாராம்.  இதனால் அதிர்ச்சியடைந்த மகபுனிசா,  தனது சகோதரி வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்து,  அவரது வீட்டுக்கு சென்று பார்க்கக் கூறியுள்ளார். 
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஹஜீதாபீவி வீட்டின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டினுள் அவர் வாய், மூக்கு, காதில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்துள்ளார். வீட்டின் பின்கதவும் திறந்து கிடந்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் போலீஸார்,  வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. ஹஜீதாபீவி அணிந்திருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 
ஹஜீதாபீவியின் சடலம் அருகே தலையணை ஒன்று கிடந்தது. தலையணையை பயன்படுத்தி அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், திங்கள்கிழமை அதிகாலை சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT