முகப்பு
தஞ்சாவூர்

சாலை விபத்து: இளைஞர் சாவு

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுமாறி விழுந்து காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:45 am IST
பகிர்:

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுமாறி விழுந்து காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). இவர் ஞாயிற்றுக்கிழமை திருக்கானூர்பட்டியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
திருக்கானூர்பட்டி அருகே சாலையில் இருந்த பள்ளத்தை பார்த்து திடீரென பிரேக் போட்டார். இதில் தடுமாறி கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments