தஞ்சாவூர்

கட்டடத்திலிருந்து  தவறி விழுந்த  தொழிலாளி சாவு

DIN

பாபநாசம் அருகே கட்டட கட்டுமானப் பணியின்போது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருவையாறு வட்டம்,  வீரசிங்கம்பேட்டை கிராமம், மேலத்தெருவை சேர்ந்த மணியன்  மகன்  முருகானந்தம் (32). கட்டட தொழிலாளி. முருகானந்தம் திங்கள்கிழமை தளவாய்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ஒரு கட்டட கட்டுமான பணியில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தாராம். 
அப்போது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
ஆனால்,  செல்லும்  வழியிலேயே முருகானந்தம் உயிரிழந்தார்.சம்பவம் குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT