திருச்சிற்றம்பலத்தில் ஜூலை 25 -இல் மக்கள் நேர்காணல் முகாம்
பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் புதன்கிழமை (ஜூலை 25) காலை 10 மணிக்கு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது.
பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் புதன்கிழமை (ஜூலை 25) காலை 10 மணிக்கு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி முகாமிற்கு தலைமை வகிக்கிறார்.
முகாமில், பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முதியோர் உதவித்தொகை வழங்கல் உள்ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன. திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்து, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.