தஞ்சாவூர்

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்

DIN

திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதியது.
தஞ்சாவூர் கரந்தையில் உள்ள தனியார் பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு அம்மன்பேட்டை வழியாக அரசூருக்குச் சென்றது. பின்னர், பஞ்சாரம் கிராமத்துச் சென்றுவிட்டு, அம்மன்பேட்டை பிரதான சாலைக்கு வந்த இந்த வேன் மீது திருவையாறில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையைக் கடந்த வேன் குடிசை வீட்டில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்குக் காயம் இல்லை.இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT